கூட்டுறவு வங்கி முறைகேடு: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மீது வழக்கு பதிவு

கூட்டுறவு வங்கி முறைகேடு: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மீது வழக்கு பதிவு
Updated on
1 min read

புதுடெல்லி

மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி யில் 2007 முதல் 2011-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், ஏராளமான சர்க்கரை ஆலை களுக்கு விதிமுறைகளை மீறி கடன் வழங்கப்பட்டதாக கூறப் படுகிறது. மேலும், இந்த நடவடிக் கையால் அந்த வங்கிக்கு சுமார் ரூ.1000 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், அவரது மருமகன் அஜித் பவார் உள்ளிட்டோருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்கள் மீது அமலாக்கத் துறையினர் நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.

மகாராஷ்ட்ரா சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற வுள்ள நிலையில், இந்த நடவடிக்கை சரத்பவாருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in