Published : 23 Sep 2019 02:43 PM
Last Updated : 23 Sep 2019 02:43 PM

தேசிய மக்கள் தொகை பதிவேடு; ஒரே அடையாள அட்டை: மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி
2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது பன்னோக்கு அடையாள அட்டை வழங்கும் விதமாக தகவல்கள் சேகரிக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது:

வரும் 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு விரிவான முறையில் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கப்படும். முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் தயாரிக்கப்படும் இந்த திட்டத்துக்காக மத்திய அரசு 12 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது.

1865-ம் ஆண்டு முதன்முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு ஒவ்வொரு பத்தாண்டுகளுக்க ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும். 16 மொழிகளில் தகவல்கள் பெறப்படும். குடிமக்களை பற்றிய முழுமையான தகவல்களை சேகரிக்கப்படும்.

பல்வேறு தகவல்களை கொண்டதாக இந்த பதிவேடு உருவாக்கப்படும். ஆதார், பாஸ்போர்ட், வங்கி கணக்கு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை என அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரே அட்டை வழங்குவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x