Published : 20 Sep 2019 10:13 AM
Last Updated : 20 Sep 2019 10:13 AM

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நில வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றுவோம்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதி

லக்னோ

அயோத்தி வழக்கில் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை பின்பற்று வோம் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு நடந்த உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜக 325 இடங் களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்ய நாத் பதவியேற்றார். அவரது தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று நேற்றுடன் 30 மாதங்கள் நிறைவு பெற்றது.

இதையொட்டி லக்னோவில் நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

பாஜக அரசு பதவியேற்ற பிறகு உத்தர பிரதேசத்தின் அடையாளம் மாறியுள்ளது. நாங்கள் சவால் களை, சாதனைகளாக மாற்றியுள் ளோம். விவசாயிகளின் தற்கொலை களைத் தடுக்க பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள் ளோம். ரூ.1 லட்சம் வரையிலான பயிர்க்கடன்களை ரத்து செய்துள் ளோம். இதன்மூலம் 86 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.

கும்பமேளா திருவிழாவை மிகச் சிறப்பாக நடத்தினோம். கடந்த இரண்டரை ஆண்டுகளில் எங்கும் கலவரம் நடைபெறவில்லை. குற்றப்பின்னணி உடையோர் சிறையில் உள்ளனர். குற்ற வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. மாநிலம் முழுவதும் 41 புதிய காவல் நிலையங்களை திறந்துள்ளோம்.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் அரசு தொடக்கப்பள்ளிகளில் 50 லட்சம் மாணவ, மாணவியர் சேர்க் கப்பட்டுள்ளனர். மாநிலம் முழு வதும் சுகாதார வசதி மேம் பட்டுள்ளது. அரசு மருத்துவ மனைகளின் தரம் உயர்த்தப் பட்டுள்ளது. தொற்று நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நில வழக்கில் அமைதிப் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண உச்ச நீதிமன்றம் வாய்ப்பு வழங்கியது. ஆனால் சில தரப்பினர் பிடிவாத மாக இருந்ததால் அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இனிமேல் உச்ச நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்றுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x