Published : 21 Jul 2015 09:52 AM
Last Updated : 21 Jul 2015 09:52 AM
சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.
ரஞ்சித் சின்ஹா சிபிஐ இயக்குநராக இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு, நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தனது வீட்டில் தனியாக சந்தித்துப் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இரு ஊழல் விவகாரங்கள் தொடர்பான வழக்குகளை அவர் காலதாமத படுத்தி வந்தார் என்றும் புகார்கள் கூறப்பட்டன.
இதுதொடர்பாக சமூக ஆர்வ லரும் மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து ரஞ்சித் சின்ஹா மீதான குற்றச்சாட்டை விசாரிக்க கடந்த மே 14-ம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்நிலையில் இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவை உச்ச நீதிமன்றம் நேற்று நியமித்தது. இக்குழுவுக்கு சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குநர் எம்.எல். சர்மா தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். குழுவின் இதர உறுப்பினர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT