Published : 18 Sep 2019 05:31 PM
Last Updated : 18 Sep 2019 05:31 PM
புதுடெல்லி
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் டிவி பேனல்களுக்கான 5 சதவீத இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்தது.
உள்நாட்டில் டிவி உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்தி, உற்பத்தியை அதிகப்படுத்தும் வகையில் இந்த வரிச்சலுகையை அளித்துள்ளது. இதன் தொலைக்காட்சி உற்பத்தி செலவு 3 சதவீதம் வரை குறைவதற்கு வாய்ப்ப்புள்ளது. ஆனால், இந்த இறக்குமதி வரிக்குறைப்பை வாடிக்கையாளர்கள் எத்தனை பேருக்கு நிறுவனங்கள் வழங்கப்போகின்றன எனத் தெரியவி்ல்லை.
இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் " 15.5 இன்ச் அளவுக்கு மேல் எல்சிடி, எஇடி டிவி பேனல்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த இறக்குமதி வரி 5 சதவீதம் ரத்து செய்யப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
பானசோனிக் நிறுவனம், தனது தொலைக்காட்சி விலையில் 4 சதவீதம் வரை விலைக்குறைப்பு செய்து வாடிக்கையாளர்களுக்கு அளிப்போம் எனத் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பேனல்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டதால், இந்தியாவில் நிறுவிய தொலைக்காட்சி நிறுவனத்தை மூடிவிட்டு சாம்ஸங் நிறுவனம் வியட்நாமுக்கு சென்றது. அதுமட்டுமல்லாமல் ஜிஎஸ்டி வரி மற்றும் பேனலின் செலவு ஆகியவற்றால் தொலைக்காட்சிகளின் விலை உயர்ந்து, விற்பனை குறையத் தொடங்கியது. ஆனால், மத்திய அரசின் இந்த அறிவிப்பால் விற்பனை உயர வாய்ப்புள்ளது.
இதுதவிர, பிலிம்களுக்கான சிப், சர்கியூட் போர்ட் அசெம்பிளி போன்றவை டிவிகள் தயாரிக்கப் பயன்படுகின்றன. அவற்றுக்கான சுங்க வரியையும் மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனங்களும், உள்நாட்டு உற்பத்தியாளர்களும் வரவேற்றுள்ளனர். அடுத்த மாதத்தில் இருந்து பண்டிகைக் காலம் தொடங்க இருப்பதால், மத்திய அரசின் இந்தச் சலுகையை வாடிக்கையாளர்ளுக்கு நிறுவனங்கள் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.
இது குறித்து எல்ஜி எல்க்ட்ரானிக்ஸ் நிறுவனம் கூறுகையில், "மத்திய அரசின் அறிவிப்பு உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கமாக அமையும்" எனத் தெரிவித்துள்ளது. மேலும், சோனி நிறுவனம் ஹேயர் நிறுவனமும் மத்திய அரசின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது.
பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT