Published : 18 Sep 2019 03:28 PM
Last Updated : 18 Sep 2019 03:28 PM
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் பாகிஸ்தானுக்கு அதன் இடத்தை பிரதமர் மோடி காட்டியுள்ளார் என பாஜக தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி பாஜக சார்பில் பிரச்சார யாத்திரையை அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார். இதற்காக ஜமத்ராவில் நடந்த கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் அம்மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இன்று மாறியுள்ளது. இது ஒரு வரலாற்று சாதனை.
இதன் மூலம் தான் பாகிஸ்தான் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை பிரதமர் மோடி காட்டியுள்ளார். இந்தியாவின் நடவடிக்கைகளை உலக நாடுகள் அனைத்தும் ஆதரிக்கின்றன. பாகிஸ்தானின் பொய் பிரச்சாரத்தை எந்த நாடும் ஏற்றுக் கொள்ள தயாரில்லை.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் முடிவை ஆதரிக்கிறாரா அல்லது எதிர்க்கிறாரா என்பதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெளிவுபடுத்த வேண்டும்.
ஹரியாணா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களுக்கு வரும்போது இதனை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT