Published : 17 Sep 2019 07:35 PM
Last Updated : 17 Sep 2019 07:35 PM

வெங்காய விலை உயர்வு தற்காலிகமானதே: ராம்விலாஸ் பாஸ்வான்

புதுடெல்லி, பிடிஐ

வெங்காயத்தின் விலை அதிகரிப்பு தற்காலிகமானது என்றும் போதிய கையிருப்பு இருப்பதால் விலையைக் கட்டுக்குள் கொண்டு வருவோம் எனவும் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் விவகார அமைச்சக தரவுகளின் படி வெங்காயத்தின் சில்லரை விற்பனை அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.56. சென்னையில் வெங்காயம் விலை ரூ.34, மும்பையில் ரூ.43, டெல்லியில் ரூ.44. கொல்கத்தாவில் ரூ.45 என்று விற்கப்பட்டு வருகிறது.

நாட்டின் வேறு சில பகுதிகளில் கிலோ விலை ரூ.50-60 என்றும் விற்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்ததாவது:

“ஒவ்வொரு ஆண்டும் இந்த விலை உயர்வு நிகழ்வு ஏற்படவே செய்யும். எனவே இது தற்காலிகமானது. உருளை, தக்காளி, வெங்காயத்தில் இது போன்ற விலை உயர்வு வழக்கமானதே. இந்த ஆண்டு வெங்காயம், ஆனால் நம்மிடம் போதிய ஸ்டாக் இருப்பதால் விநியோகம் பாதிக்காது, விலையைக் கட்டுப்படுத்த முடியும்” என்று கூறுகிறார்.

வெங்காயம் அதிகம் விளையும் மகாராஷ்டிரா, கர்நாடாகவிலிருந்து வெங்காய வரத்து வெள்ளம் காரணமாக பாதிப்படைந்தது. நாட்டில் 56,000 டன்கள் வெங்காயம் கையிருப்பில் உள்ளது, எனவே விநியோகம் பாதிக்காது என்றார் ராம்விலாஸ் பாஸ்வான். கையிருப்பிலிருந்து வெங்காயத்தை பொதுவிநியோக முறை மூலம் விநியோகிக்க வகை செய்ய வேண்டும் என்று டெல்லி மற்றும் பிற மாநிலங்கள் கோரியுள்ளன.

அரசு நடத்தும் எம்.எம்.டி.சி 2000 டன்கள் வெங்காயத்தை இறக்குமதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விலை உயர்வைத் தடுக்க ஏற்றுமதி சலுகைகள் விலக்கிக் கொள்ளப்பட்டு குறைந்த பட்ச ஏற்றுமதி விலை அதிகரிக்கப்பட்டுள்ளது, மேலும் பதுக்கல்காரர்கள் மீதும் கருப்புச் சந்தையையும் அரசு கண்காணித்துக் கட்டுப்பாடுக்குள் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.” என்றார் ராம்விலாஸ் பாஸ்வான்.

இப்போதைக்கு புதிய வெங்காயம் இல்லை, கடந்த ஆண்டு விளைச்சலிலிருந்து ஸ்டாக் சேமித்து வைக்கப்பட்டவையே என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x