Published : 17 Sep 2019 05:57 PM
Last Updated : 17 Sep 2019 05:57 PM

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நிச்சயம் ஒருநாள் மீட்போம்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி

புதுடெல்லி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீரும் இந்தியாவின் ஒரு பகுதியே அதனை நிச்சயமாக ஒருநாள் மீட்போம் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த ஜெய்சங்கர் தனது துறை ரீதியான 100 நாள் சாதனைகளை விளக்கினார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "100 நாட்களில் இந்த அரசாங்கத்தின் மிகப்பெரிய சாதனையாக தேசப் பாதுகாப்பு இலக்குகளுக்கும் வெளியுறவு கொள்கைக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதையே கூறுவேன்.

நமது அண்டை நாடு இயல்பான நிலைக்குத் திரும்பும்வரை நமக்கு அவர்களால் சவால் நீடித்துக் கொண்டே இருக்கும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அவர்கள் நிறுத்த வேண்டும்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் இந்தியாவுடையது என்ற நமது நிலைப்பாட்டில் எப்போதுமே மாற்றமில்லை. அதனை நிச்சயமாக ஒருநாள் மீட்போம்.

இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்புறவு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது" எனக் கூறினார்.

- ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x