Published : 17 Sep 2019 09:57 AM
Last Updated : 17 Sep 2019 09:57 AM

அயோத்தி நில உரிமை வழக்கில் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க விருப்பம்: உச்ச நீதிமன்றத்தில் மத்தியஸ்தர் குழு மனு

புதுடெல்லி

அயோத்தி நில உரிமை வழக்கு தொடர்பாக மீண்டும் பேச்சு வார்த்தையை தொடங்க அனுமதி கோரி மத்தியஸ்தர் குழு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அயோத்தியில் நீண்டகாலமாக பாபர் மசூதி மற்றும் ராம ஜென்ம பூமி நிலப் பிரச்சினை இருந்து வருகிறது. இதில் ஒருமித்த தீர்வு காண்பதற்காக உச்ச நீதிமன்றம் மத்தியஸ்தர்கள் குழுவை கடந்த மார்ச் மாதம் நியமித்தது. இக்குழு வுக்கு தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா நியமிக்கப்பட்டார்.

இக்குழுவில் பெங்களூருவில் செயல்பட்டு வரும் வாழும் கலை அமைப்பைச் சேர்ந்த  ரவி சங்கர், மூத்த வழக்கறிஞர் ராம் பஞ்சு ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் தங் கள் அறிக்கையை கடந்த மாதம் தாக்கல் செய்தனர்.

அப்போது அயோத்தி நில விவ காரத்தில் சமரச முயற்சி கை கூடவில்லை என மத்தியஸ்தர் குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட் டது. இதையடுத்து தலைமை நீதி பதி ரஞ்சன் கோகோய் தலைமை யிலான அமர்வு வழக்கை ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் விசாரித்து விரைவாக முடிக்கப்படும் எனத் தெரிவித்தது.

இந்நிலையில், மீண்டும் மத் தியஸ்தர் குழுவினர் நடவடிக் கையை தொடங்க வேண்டும் என இந்து மற்றும் முஸ்லிம் அமைப்பு கள் வேண்டுகோள் விடுத்து வரு கின்றன.

இந்நிலையில் மத்தியஸ்தர் குழு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

அயோத்தி பிரச்சினையில் தீர்வு காண மீண்டும் மத்தியஸ்தர் குழு தங்களது முயற்சியை தொடங்க வேண்டும் என்று சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாடா, மூல வர் ராம் லல்லா ஆகிய அமைப்பு கள் விரும்புகின்றன. இதுதொடர் பாக அந்த அமைப்புகள் எங்க ளுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. எனவே மத்தியஸ்த பேச்சு வார்த் தையை மீண்டும் தொடங்க அனு மதிக்க வேண்டும். அதேசமயம் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையை நிறுத்த தேவையில்லை.

இவ்வாறு மத்தியஸ்தர் குழு தாக்கல் செய்த மனுவில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x