Published : 16 Sep 2019 03:08 PM
Last Updated : 16 Sep 2019 03:08 PM

போக்குவரத்து விதிமீறல்கள்: அபராதங்களைக் குறைக்க மத்திய அரசை அணுகும் கேரளா

திருவனந்தபுரம்,

புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அந்தந்த மாநிலங்களில் அபராதக் கட்டணத்தைக் குறைத்துக் கொள்ளலாம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தாலும் இது தொடர்பாக தெளிவு பிறக்கவில்லை என்று கேரள அரசு மத்திய அரசிடம் விளக்கம் கேட்க உள்ளது.

இது தொடர்பாக கேரள போக்குவரத்து அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டினார். இதில் பல தெரிவுகளையும் விவாத்திற்கு எடுத்துக் கொண்ட பிறகு மத்திய அரசிடமே கேட்டு விடுவோம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

அதாவது மாநில அரசுகளுக்கு அபராதத்தைக் குறைக்க அதிகாரம் உள்ளதா? என்பது குறித்து போதிய தெளிவு இல்லை என்பதாக கேரள அரசு உணர்கிறது.

தெளிவு பிறக்கும் வரை சட்ட அமலாக்கம் செய்வோர் விழிப்புணர்வு மோஸ்தரில் செயல்பட கேரள போக்குவரத்து அமைச்சர் சசீந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x