Published : 16 Sep 2019 11:16 AM
Last Updated : 16 Sep 2019 11:16 AM

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்த்த மனுக்கள் மீது இன்று விசாரணை

புதுடெல்லி: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு நீக்கியது. மேலும், காஷ்மீர் மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவி்த்தது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவர் சஜ்ஜத் லோனே உட்பட பலர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதை எதிர்த்தும் சஜ்ஜத் லோனே மனு தாக்கல் செய்தார். மேலும், காஷ்மீரில் ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x