Published : 16 Sep 2019 10:38 AM
Last Updated : 16 Sep 2019 10:38 AM

சத்தீஸ்கர், மகாராஷ்டிராவில் 8 நக்சல்கள் சுட்டுக் கொலை

ராய்பூர் / நாக்பூர்

சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் நக்சல்களுக்கும் போலீஸாருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்சல்கள் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 வெவ்வேறு என்கவுன்ட்டரில் 6 நக்சல்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘‘பஸ்தார் பகுதியின் சுக்மா, பிஜப் பூர், தண்டேவாடா ஆகிய 3 இடங் களில் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமையில் 24 மணி நேரத் தில் நக்சல்களுக்கும் போலீ ஸாருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 6 நக்சல்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர்’’ என்று தெரிவித்தனர்.

சுக்மா மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை 3 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிஜப்பூர் மாவட்டத்தில் ஒருவரும், தண் டேவாடா மாவட்டத்தில் 2 நக்சல் களும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் பதுங்கியிருந்த இடங் களில் இருந்து ஏராளமான ஆயு தங்கள் கைப்பற்றப்பட்டன.

இடைத்தேர்தல்

சத்தீஸ்கரின் தண்டேவாடா சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் 23-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் பாஜக எம்எல்ஏ பிமா மாந்தவி இறந்ததால் அங்கு இடைத்தேர்தல்நடைபெறு கிறது. இதை சீர்குலைக்க நக் ஸல்கள் திட்டமிட்டுள்ளனர். இதை முறியடிக்க நக்சல் தடுப்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின் றனர் என்று போலீஸார் தெரிவித் தனர்.

மகாராஷ்டிராவில் 2 பேர்

மகாராஷ்டிர மாநிலம் கட்சி ரோலி மாவட்டத்தில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாகப் போலீ ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத் தது. உடனடியாக போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். குறிப்பாக நாக்பூரில் இருந்து 170 கி.மீ. தொலைவில் உள்ள அடர்ந்த நர்கசா வனப்பகுதியில் நேற்று காலை நக்சல் தடுப்புப் படையைச் சேர்ந்த கமாண்டோக்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப் போது அங்கு மறைந்திருந்த நக்சல்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

பதிலுக்கு கமாண்டோக்களும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரு தரப்புக்கும் இடையில் நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடை பெற்றது. இந்தச் சண்டையின் முடிவில் 2 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களை அடையாளம் காணும் பணி நடை பெற்று வருகிறது.மேலும், வனப் பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெறுகிறது என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் நேற்று தெரிவித்தார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x