Published : 15 Sep 2019 05:47 PM
Last Updated : 15 Sep 2019 05:47 PM

பொறியாளர்கள் தினத்தில் பிரதமர் வாழ்த்து

பொறியாளர்கள் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி பொறியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எம்.விஸ்வேஸ்வரய்யா பிறந்தநாளான இன்று அவருக்கும் புகழாரம் சூட்டியுள்ளார்.

“பொறியாளர்கள் பொறுப்போடும், உறுதியோடும் பணியாற்றுகிறார்கள். அவர்களின் புதுமை முயற்சி இல்லாவிட்டால், மனித குல முன்னேற்றம் முழுமையடையாமல் இருந்திருக்கும். பொறியாளர்கள் தினத்தில் வாழ்த்துகள்.

கடின உழைப்பில் ஈடுபடும் பொறியாளர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். நாட்டின் தலைசிறந்த பொறியாளரான சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா பிறந்த ஆண்டில் அவருக்கும் புகழஞ்சலி” என்று பிரதமர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x