Published : 15 Sep 2019 11:32 AM
Last Updated : 15 Sep 2019 11:32 AM
பஞ்சாபில் பிரிவினையைத் தூண்டி, தேசவிரோத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி 314 சீக்கியர்களின் பெயர்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டன. அவர்கள் தற்போது கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இந்நிலையில் கருப்பு பட்டியலில் இருந்து 312 சீக்கியர்களின் பெயர்களை மத்திய அரசு நேற்று முன்தினம் நீக்கியது. இதன்மூலம் அவர்கள் பஞ்சாபில் உள்ள தங்கள் உறவினர்களை சந்திக்க வழிவகை பிறந்துள்ளது.
இதுதொடர்பாக ஐக்கிய அகாலி தளத்தின் பொதுச்செயலாளர் பாய் சத்னம் சிங் மனவா வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் நரேந்திர மோடி அரசின் முடிவை பாராட்டி, வரவேற்கிறேன். பிரிவினையை தூண்டியதாக கைது செய்யப்பட்ட சீக்கியர்களையும் சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT