Published : 15 Sep 2019 11:24 AM
Last Updated : 15 Sep 2019 11:24 AM

மகாத்மா காந்தி, அம்பேத்கரின் சிலைகளை சேதப்படுத்தியவர்களுக்கு பிரியங்கா கண்டனம்

மகாத்மா காந்தி மற்றும் அம்பேத்கர் சிலைகளை சேதப்படுத்தியவர்களுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அம்பேத்கர் சிலையை சமூக விரோதிகள் சிலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சேதப்படுத்தினர். இப்போது ஜலாவுன் மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையை சேதப்படுத்தி உள்ளனர். இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் கோழைகள். நாட்டின் சிறந்த மனிதர்களை இருட்டில் அவமானப்படுத்த முயற்சித்துள்ளீர்கள். இதுதான் உங்கள் வாழ்க்கையின் ஒரே சாதனை. இதுபோன்ற தாக்குதலால் அவர்களுடைய புகழை உங்களால் ஒருபோதும் கெடுக்க முடியாது” என பதிவிட்டுள்ளார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x