Published : 13 Sep 2019 08:34 PM
Last Updated : 13 Sep 2019 08:34 PM
பனாஜி, ஐ.ஏ.என்.எஸ்
வடக்கு கோவாவில் உள்ள மபுசா காவல் நிலையம் மின்சாரக் கட்டணங்களைச் செலுத்தாமல் ஏகப்பட்ட தொகையினை நிலுவையில் வைத்ததால் காவல்நிலைய மின்சாரம் துண்டிக்கப்பட்டு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உதவி பொறியாளர் எம்.எம்.ஷிரூர் கூறும்போது, ரூ.19 லட்சம் தொகையைச் செலுத்தவில்லை ஆகவே மபுசா காவல் நிலையத்தின் மின் இணைப்புத் துண்டிக்கப் பட்டுள்ளது, என்றார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
“பல மாதங்களாக இந்தத் தொகை நிலுவையில் உள்ளது. தொடர்ந்து செலுத்துமாறு வலியுறுத்தி வந்தோம், அவர்கள் காதில் வாங்கவில்லை, எனவே போலீஸ் நிலையத்தின் மின் இணைப்பைத் துண்டித்தோம்” என்றார்.
இதனையடுத்து கோவா மாநில பாஜக ஆட்சியின் உள்துறை அமைச்சக அதிகாரியும் மாநில மின்சாரத் துறை தலைவரும் தலையிட்டு பிறகு மின்சார சப்ளைத் தொடங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT