Published : 09 Sep 2019 06:03 PM
Last Updated : 09 Sep 2019 06:03 PM
குவஹாத்தி, பிடிஐ
அசாம் மாநிலத்தில் நடத்தியதைப் போலவே தேசிய குடிமக்கள் பதிவேட்டினை (என்.ஆர்.சி) மணிப்பூர் மாநிலத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மணிப்பூர் மாநில முதல்வர் என்.பிரேன் சிங் கோரிக்கை வைத்துள்ளார்.
“நாங்கள் ஏற்கெனவே என்.ஆர்.சி. வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்”, என்று குவஹாத்தியில் வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணி மாநாட்டிற்கிடையே செய்தியாளர்களிடம் பிரேன் சிங் தெரிவித்தார்.
“எங்களுக்கும் வடகிழக்கில் பல மாநிலங்களுக்கும் என்.ஆர்.சி. தேவை. மணிப்பூர் அமைச்சரவையில் ஏற்கெனவே இது தொடர்பாக நாங்கள் முடிவெடுத்து விட்டோம்” என்றார் பிரேன் சிங்.
நாட்டில் எங்கும் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் தங்க அனுமதிக்கக் கூடாது ‘இதுதான் தெள்ளத் தெளிவான செய்தி’ என்று அவர் மேலும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதனை எப்படி நடைமுறைப்படுத்துவீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்ட போது, விரேன் சிங் கூறியதாவது:
இது மத்திய அரசு மூலம் நடைமுறைப்படுத்தப்படும். அஸாம் மாநிலம் உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் இந்த நடைமுறையைச் செய்தது. ஆகவே நாங்களும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம், அவர்கள் இதனைச் செய்து கொடுப்பார்கள்.
இவ்வாறு கூறினார் பிரேன் சிங்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT