Published : 09 Sep 2019 01:29 PM
Last Updated : 09 Sep 2019 01:29 PM

காஷ்மீரில் 36 நாட்களுக்கு பிறகு பெரும்பாலான பகுதிகளில் கட்டுப்பாடுகள் நீக்கம்

ஸ்ரீநகர்

காஷ்மீரில் 36 நாட்களுக்கு பிறகு இன்று பெரும்பாலான இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த மாதம் 5-ம் தேதி நீக்கியது. மேலும், காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களா கவும் பிரித்தது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காஷ்மீரில் எதிர்ப்பு எழுந்ததன் காரணமாக அங்கு 144 தடை உத்தரவையும், கடுமையான கட்டுப்பாடுகளையும் அரசு விதித் தது. மேலும், அங்கு கூடுதல் எண்ணிக்கையில் பாதுகாப்புப் படையினரும், ராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர்.

அதுமட்டுமின்றி, வதந்தி பரவு வதை தடுப்பதற்காக அங்கு தொலைபேசி, செல்போன், இணையதள சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

இதன் காரணமாக, காஷ்மீரில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. காஷ்மீரில் தொடர்ந்து அமைதியான சூழல் நிலவுவதை கருத்தில் கொண்டு, அங்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவுகளையும், கட்டுப்பாடு களையும் மத்திய அரசு படிப் படியாக விலக்கி வந்தது.

இந்தநிலையில் 36 நாட்கள் முடிவடைந்த நிலையில், காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் இன்று தடை உத்தரவும், கட்டுப்பாடுகள் பெருமளவு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.

ஸ்ரீநகரில் லால் சவுக் உள்ளிட்ட இடங்களில் தடுப்பு அரண்கள் நீக்கப்பட்டு விட்டன. ஒரு சில பகுதிகளில் தடை உத்தரவு தொடர்கிறது. வாகன போக்குவரத்தை பாதுகாப்பு படை வீரர்கள் கண்காணித்து வருகின்றனர். ஸ்ரீநகரில் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் இன்னமும் திறக்கப்படவில்லை. அதுபோலவே பள்ளிகளும் முழுமையான அளவில் நடைபெறவில்லை.

இதனிடையே முகரம் அனுசரிக்கப்படும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முகரத்தையொட்டி காஷ்மீரில் சில இடங்களில் வன்முறைகள் நடந்துள்ளன. எனவே வன்முறையை தடுக்கும் நோக்குடன் இந்த தடை உத்தரவு சில நாட்கள் நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

முகரத்தையொட்டி அடுத்த சில நாட்களுக்கு மட்டும் குறிப்பிட்ட இடங்களில் கண்காணிப்பு தொடரும் என பாதுகாப்பு படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x