Published : 09 Sep 2019 12:19 PM
Last Updated : 09 Sep 2019 12:19 PM

அசாம் முதல்வர், ஆளுநருடன் அமித் ஷா சந்திப்பு

குவாஹாட்டி

அசாம் முதல்வர் மற்றும் ஆளுநரை உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்தார். ராஜ்பவனில் இந்தச் சந்திப்பு நடந்தது.

அசாம் முதல்வர் சர்பானந்தா சோனாவால், ஆளுநர் ஜகதீஷ் முக்கி, மாநில அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா ஆகியோருடன் அமித் ஷா மாநில நலன் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர், அனைவரும் காமாக்யா கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். அசாமில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமித் ஷா நேற்று, வடக்கு கிழக்கு மாநிலங்கள் கவுன்சில் கூட்டத்தின் 68-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவர் வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 371 நீக்கப்படாது என வாக்குறுதி அளித்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட நிலையில் வடகிழக்கு மாநிலங்கள் தங்களுக்கான சிறப்பு அந்தஸ்தும் ரத்து செய்யப்படுமோ என்று கவலை தெரிவித்தன.

இந்நிலையில் அமித் ஷா சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படாது எனக் கூறினார். சட்டப்பிரிவு 370-ஐப் போல் 371-வது சட்டப் பிரிவு தற்காலிகமானது அல்ல. இது உண்மையிலேயே சிறப்பு அந்தஸ்து. அதனால், அரசாங்கம் அதைச் சிதைக்காது எனக் கூறியிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x