லடாக், ஜம்மு-காஷ்மீருக்கு ஒரே உயர் நீதிமன்றம்

லடாக், ஜம்மு-காஷ்மீருக்கு ஒரே உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

ஜம்மு

ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு பொதுவாக ஒரே உயர் நீதிமன்றம் செயல்படும் என்று நீதித் துறை இயக்குநர் ராஜீவ் குப்தா அறிவித்துள்ளார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட் டுள்ளது. இதுதொடர்பாக கடந்த 5-ம் தேதி குடியரசுத் தலைவரின் அரசாணை வெளியானது. நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கினார்.

அதன்படி ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் லடாக் பகுதி சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் அக்டோபர் 31-ம் தேதி முதல் இரு யூனியன் பிரதேசங்களும் தனித்தனியாக செயல்பட உள்ளன.

இந்நிலையில் காஷ்மீர் நீதித் துறை அகாடமி இயக்குநர் ராஜீவ் குப்தா, ஜம்முவில் நேற்று கூறியதாவது:

வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் சட்டப் பேரவையுடன் செயல்படும். லடாக் யூனியன் பிரதேசம், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும்.

ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு பொதுவாக ஒரே உயர் நீதிமன்றம் செயல்படும். ஜம்மு-காஷ்மீரை பொறுத்தவரை 164 சட்டங்கள் வாபஸ் பெறப்படும். 166 சட்டங்கள் தொடர்ந்து அமலில் இருக்கும்.

இதுதொடர்பாக சட்ட நிபுணர் களுடன் ஆலோசனை நடத்தப் பட்டுள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு ராஜீவ் குப்தா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in