Published : 08 Sep 2019 03:58 PM
Last Updated : 08 Sep 2019 03:58 PM

மோடி அரசின் 100 நாட்களில் கொடுங்கோன்மை, குழப்பம், அராஜகம் : காங்கிரஸ் புகார்

காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர் கபில் சிபல்.

புதுடெல்லி

மோடி அரசாங்கத்தின் 100 நாட்களின் ஆட்சியை "ஆணவம், நிச்சயமற்ற தன்மை மற்றும் வேதாந்த அரசியல்" என்றுதான் வகைப்படுத்த வேண்டும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

பதவியேற்றதிலிருந்து, இந்த 100 நாட்களில் காஷ்மீர், அசாமில் குடிமக்கள் தேசிய பதிவேடு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிரான கைது நடவடிக்கைகள், பொருளாதார மந்த நிலை குறித்த விவாதங்கள், தான் நடந்துள்ளது என இன்று வெளியிட்டுள்ள ட்வீட்களில் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ மின்னணு தளத்தில் தனது தொடர்ச்சியான ட்வீட்களில் இன்று கூறப்பட்டதாவது:

இரண்டாவது முறை ஆட்சியைப் பிடித்த பாஜகவின் முதல் 100 நாட்களை மூன்றே வார்த்தைகளில் - கொடுங்கோன்மை, குழப்பம் மற்றும் அராஜகம்" என்று சொல்லிவிடலாம்.

மத்திய அரசின் கீழ் இயங்கும் முக்கியமான எட்டு துறைகள் 2 சதவீதத்திற்கும் குறைவான வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளன, நமது பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்பதை நமது நிதியமைச்சர் ஏற்க மறுக்கிறார். பாஜக இந்த அலட்சியம் மற்றும் ஏமாற்றுப் பாதையைத் தொடர்ந்தால், நமது நாடு மேலும் மந்தநிலையை நோக்கி செல்ல வேண்டியதுதான்.

கடந்த ஆண்டை விட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சரிவு என்பது அரசாங்கத்தின் அறியாமை மற்றும் பொருளாதாரத்தின் "மோசமான நிர்வாகத்தின்" நேரடி விளைவாகும். தொழில், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் முன்னாள் பிரதமர் டாக்டர் (மன்மோகன்) சிங் ஆகியோரின் குரல்களைப் புறக்கணிப்பதன் மூலம், பாஜக பொருளாதாரத்தை கையாள்வதில் முற்றிலும் திறமையற்றது என்பதை நிரூபித்துள்ளது.

பல ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு ஆட்டோமொபைல் துறை மிக மோசமான நெருக்கடியை இப்போது எதிர்கொண்டுள்ளது, அமெரிக்கா மற்றும் சீனாவை விட நமது பொருளாதாரம் சிறப்பாக செயல்படுகிறது என்று மற்ற அனைத்து அரசாங்கமும் சொல்ல வேண்டும்"

இவ்வாறு காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கங்களில் தெரிவித்துள்ளது.

கபில் சிபல் ட்வீட்

அதைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த செய்தித் தொடர்பாளர் கபில் சிபல் ட்வீட்டரில் தனது கருத்துக்களை வெளியிட்டார்.

கபில் தனது ட்விட்டர் பதிவுகளில் கூறியுள்ளதாவது:

''மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றியை மக்கள் அளித்தது சாதாரண மனிதனுக்கும் நல்லது செய்யத்தான். ஆனால் அதற்கு நேர்மாறாகநடந்துள்ளது. சாதாரண மனிதனின் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன,

மடிக்கணினி ஊடகங்கள் இன்னும் ஒருதலைபட்சமாகி வருகின்றன, பெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்து வருகின்றன, கல்வி மற்றும் சுகாதாரம் குறித்து அரசிடமிருந்து எந்த செயல்திட்டமும் இல்லை, ஆனால் அரசியல் எதிரிகளுக்கு எதிராக வேதாந்த அரசியல் நடந்துகொண்டிருக்கிறது. அமலாக்க இயக்குநரகத்தால், எந்த ஆதாரமும் இல்லாமல் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது, வருமான வரித் துறை மற்றும் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) ஆகியவை தவறாகப் பயன்படுத்தப்படுத்தப்படுகின்றன.

சிறுவியாபாரி துன்பத்தில் இருக்கிறார், தங்கள் சொந்த மக்களிடமே ஆதாரங்கள் எங்கே என்று கேட்கிறார்கள். அவர்கள் ஏற்கெனவே இங்கு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்'' என்று கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x