Published : 07 Sep 2019 05:26 PM
Last Updated : 07 Sep 2019 05:26 PM
புதுடெல்லி, பிடிஐ
அகஸ்டாவெஸ்ட்லேண்ட் விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலின் ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் நிராகரித்தது.
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் மைக்கேலின் ஜாமீன் மனுக்களை நிராகரித்தார். அதாவது ஜாமீன் அளிப்பதற்கான போதிய அடிப்படைகள் இல்லை என்று நிராகரிப்பதாக அவர் தன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 22ம் தேதி துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்த ஆண்டு ஜனவரி 5ம் தேதி அவர் விசாரணைக்காவலில் எடுக்கப்பட்டார். இது அமலாக்கத்துறை வழக்காகும், இதே வழக்கு தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கு தொடர்பாகவும் இவர் விசாரணைக்காவலில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
மொத்தம் 3 இடைத்தரகர்கள் இந்த விவகாரத்தில் உள்ளனர், கிறிஸ்டியன் மைக்கேல் தவிர கிரோ ஹாஷ்கே என்பவரும் கார்லோ கெரோசா என்பவரும் மற்ற இரண்டு இடைத்தரகர்கள் ஆவார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT