Published : 05 Sep 2019 09:05 PM
Last Updated : 05 Sep 2019 09:05 PM

சிதம்பரத்துக்கு சிறையில் தனிச்சலுகை இல்லை: திஹார் சிறை அதிகாரி


புதுடெல்லி
சிதம்பரத்துக்கு தனிச்சலுகைகள் கிடையாது, வழக்கமான விசாரணை கைதியாகவே நடத்தப்புவார் என திஹார் சிறை அதிகாரி தெரிவித்தார்.
ஐஎன்எஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த மாதம் 21-ம் தேதி சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார். ஏறக்குறைய 15 நாட்களாக சிபிஐ காவலில் ப.சிதம்பரம் இருந்து வருகிறார். இந்த வழக்கின் விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குகர் முன் நடந்து வருகிறது. ப.சிதம்பரத்தை 14 நாட்கள் (வரும் 19-ம் தேதிவரை) நீதிமன்றக் காவலில் திஹார் சிறையில் அடைக்க டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிதம்பரத்துக்கு அளிக்கப்படும் சலுகை உள்ளிட்ட விவரங்கள் குறித்து திஹார் சிறை பொது இயக்குநர் சந்தீப் கோயல் கூறியதாவது:
ஜெயில் என்பது ஜெயில் தான். நாங்கள் நீதிமன்றத்தின் உத்தரவையே பின்பற்றுவோம். சிறையில் யாருக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படாது. எனவே சிதம்பரமும் வழக்கமான விசாரணை கைதிகளை போலவே நடத்தப்படுவார். 60 வயதுக்கு மேல் என்பதாலும், பொருளாதார குற்றங்கள் தொடர்பாக என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறதோ அதன் அடிப்படையில் மட்டுமே நாங்கள் அவரை நடத்துவோம். எனினும் பாதுகாப்பு காரணங்கள் இருப்பதால் அதில் நீதிமன்ற உத்தரவு முழுமையாக கடைபிடிக்கப்படும்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x