Published : 05 Sep 2019 09:43 AM
Last Updated : 05 Sep 2019 09:43 AM

டி.கே. சிவகுமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸார் போராட்டம்: பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு

இரா.வினோத்

பெங்களூரு

கர்நாடக முன்னாள் அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவகுமார், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து புதன்கிழமை மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என மாநில காங் கிரஸ் செயல் தலைவர் தினேஷ் அறிவித்தார். இதையொட்டி கர் நாடகாவில் உள்ள 30 மாவட்டங் களிலும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று தீவிர போராட்டத்தில் ஈடு பட்டனர். பெங்களூரு, ராம்நகர், மண்டியா, பெல்லாரி, தும்கூரு உள்ளிட்ட இடங்களில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

ராம்நகரில் நூற்றுக்கும் மேற் பட்ட காங்கிரஸார் சாலை மறிய லில் ஈடுபட்டதால் பெங்களூரு - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து 5 மணி நேரம் முடங்கியது. அந்த வழியாக இயங் கிய வாகனங்கள் மீது போராட்டக் காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத் தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இத னால் ராம்நகர் மாவட்டம் முழு வதுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப் பட்டது.

இதேபோல டி.கே.சிவகுமாரின் சொந்தத் தொகுதியான கனகப்புரா வில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆங்காங்கே திறக்கப்பட்டிருந்த கடைகள் மீது அவரது ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால், பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. கனகப் புரா தொகுதியில் இயக்கப்பட்ட 5-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்து களை தாக்கி, தீ வைத்து எரித்தனர்.

அரசு சொத்துகளை சேதப்படுத் தியது மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது தொடர் பாக 500-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

இந்தப் போராட்டத்தால் ராம் நகர், கனகப்புரா, தும்கூரு உள் ளிட்ட இடங்களில் பதற்றம் ஏற் பட்ட நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

எடியூரப்பா விளக்கம்

முதல்வர் எடியூரப்பா அளித்த பேட்டியில், “டி.கே.சிவகுமாரின் கைது எனக்கு எந்த மகிழ்ச்சியையும் அளிக்கவில்லை. அவர் விரைவில் விடுதலை அடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். என் வாழ்க்கையில் நான் யாரையும் வெறுத்ததில்லை. சட்டம் தன் கடமையை செய்துள்ளதாகவே நினைக்கிறேன். டி.கே.சிவகுமார் விடுதலையானால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். எனவே காங்கிரஸார் இந்த விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது” என கூறியுள்ளார்.

இதனிடையே டி.கே.சிவக்குமார் நேற்று டெல்லி சிறப்பு நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 13-ம் தேதி வரை அமலாக் கத் துறை காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிபதி அஜய் குமார் அனுமதி வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x