Published : 04 Sep 2019 09:38 AM
Last Updated : 04 Sep 2019 09:38 AM

அபிநந்தனுடன் விமானத்தில் பயணித்ததில் மகிழ்ச்சி; போர் விமானம் ஓட்டிய தளபதி தனோவா கருத்து

பதான்கோட் விமானப்படை தளத்தில் மிக்.21 ரக விமானத்தில் இருந்து இறங்கும் தளபதி பி.எஸ்.தனோவா, அபிநந்தன். படம்: பிடிஐ

புதுடெல்லி

விங் கமாண்டர் அபிநந்தன் மீண்டும் போர் விமானத்தை ஓட்டுவதற்கு 6 மாதங்களில் தகுதி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக விமானப் படை தளபதி பி.எஸ். தனோவா தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் புல்வாமா தாக்குத லுக்கு பதிலடி கொடுக்கும் வகை யில், கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தானின் பாலகோட் பகுதி யில் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத பயிற்சி முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, பாகிஸ் தான் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றன. அப்போது இந்திய போர் விமானங் கள் அந்த விமானங்களை விரட்டிச் சென்றன. இதில் மிக் 21 ரக விமா னத்தை ஓட்டிய விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தானின் எப்-16 ரக விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தி னார். அதேநேரம், அவர் சென்ற விமானமும் விபத்தில் சிக்கியதால், அதிலிருந்து வெளியேறிய அபிநந்தன் பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்டார். எனினும், இந்திய அரசின் முயற்சியால் அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா விரைவில் ஓய்வு பெற உள்ளதையடுத்து, மிக்-21 ரக பயிற்சி போர் விமானத்தை நேற்று முன்தினம் கடைசியாக ஓட்டினார். பஞ்சாபின் பதான்கோட் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்டு சுமார் 30 நிமிடம் பறந்த அந்த விமானத்தில் அவருடன் அபிநந்தனும் பயணம் செய்தார்.

தரையிறங்கிய பிறகு தனோவா செய்தியாளர்களிடம் கூறும்போது, “அபிநந்தனுடன் விமானத்தில் பயணித்தது மகிழ்ச்சியாக இருந் தது. எங்கள் இருவருக்கும் 2 ஒற்றுமை உள்ளது. இருவருமே சண்டையின்போது போர் விமா னத்திலிருந்து வெளியேறியவர்கள். 2-வதாக இருவருமே பாகிஸ்தானு டன் போரிட்டோம். நான் கார்கிலில் போரிட்டேன், அவர் பாலகோட் தாக்குதலுக்குப் பிறகு போரிட்டார். அதேநேரம், நான் 9 மாதங்கள் கழித்துதான் மீண்டும் போர் விமா னத்தை ஓட்டுவதற்கான தகுதி பெற்றேன். ஆனால், அபிநந்தன் 6 மாதங்களிலேயே தகுதி பெற்றுள்ளார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x