Published : 31 Aug 2019 06:48 PM
Last Updated : 31 Aug 2019 06:48 PM
சனிக்கிழமையான இன்று அசாம் மாநிலத்தின் தேசியக் குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) வெளியிடப்பட்டது, சுமார் 19 லட்சம் மக்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இவர்கள் தீர்ப்பாயத்திடம் முறையீடு செய்து மீண்டும் தங்களை பட்டியலில் இணைத்துக் கொள்ள வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நீக்கப்பட்டோர் பட்டியலில் நடப்பு எம்.எல்.ஏ. ஒருவரின் பெயரும் வீர் சக்ரா விருது பெற்ற முன்னாள் ராணுவ வீரர் பெயரும் இப்போதைக்கு இடம்பெறாமல் நீக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ராணுவ அதிகாரி பெயர் நீக்கம்:
ராணுவத்தில் ஜூனியர் கமிஷண்டு ஆபீசர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற மொகமது சனாவுல்லா என்ற முன்னாள் ராணுவ வீரர் பெயர் இவரது இருமகன்களுடன் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இவர் சிறிய காலம் முகாமில் காலத்தைச் செலவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் வேடிக்கை என்னவெனில் இவரது மனைவி பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இவ்வாறான குடும்பங்களில் முக்கியமாக பிரிகேடியர் கே.பி.லாஹிரி என்ற முன்னாள் ராணுவ வீரர் பெயரும் நீக்கப்பட்டுள்ளது. 1965 போரின் போது இவரது தீரத்துக்காக வீர் சக்ரா விருது பெற்றவர். அதே போல் 1971ம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரின் போதும் இவர் உத்திகளை வகுத்தவர் என்று அறியப்படுபவர்.
அதே போல் ராதாகிருஷ்ணா சரஸ்வதி குடும்ப உறுப்பினர்கள் பலர் என்.ஆர்.சி. நீக்கப்பட்டியலில் உள்ளனர். இந்தக் குடும்பம்தான் நூற்றாண்டுக்கு முன்பாக அசாமின் முதல் பட்டு ஏற்றுமதியாளர்கள் ஆவார்கள்.
அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி எம்.எல்.ஏ. அனந்த குமார் மாலோ பெயரும் பட்டியலில் இல்லை. அவர், “என் மகன் பெயரும் இல்லை, இது துரதிர்ஷ்டவசமானது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. இலியாஸ் அலி பெயர் சேர்க்கப்பட்டுள்ளது, ஆனால் இவர் மகள் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT