Published : 30 Aug 2019 11:15 AM
Last Updated : 30 Aug 2019 11:15 AM

அசாம் குடிமக்கள் தேசிய பதிவேடு இறுதிபட்டியல் நாளை வெளியீடு

திஸ்பூர்
அசாம் குடிமக்கள் தேசிய பதிவேடு இறுதிபட்டியல் நாளை காலை வெளியிடப்படுகிறது. வரைவு பட்டியலில் சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பெயர் விடுபட்டதாக புகார் எழுந்தநிலையில் தற்போது இறுதிபட்டியல் வெளியாக உள்ளது.
அசாமில் உள்ள வங்கதேசத்தவர்களை கண்டறியும் பொருட்டு அம்மாநிலத்தில் குடிமக்கள் தேசிய பதிவேடு கொண்டு வரப்பட்டது. இதன்படி குடியுரிமை மசோதா, மக்களவையில் ஜனவரி 8- ம் தேதி குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. எனினும் மாநிலங்களவையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

இதில், வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வந்து 6 ஆண்டுகளாக வசித்து வரும் இந்துக்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், பவுத்தர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அசாம் மட்டுமின்றி வட கிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட குடிமக்கள் தேசிய பதிவேடு வரைவு பட்டியலில் 40 லட்சத்திற்கும் அதிகமானவர்களின் பெயர்கள் அகற்றப்பட்டது சர்ச்சையை கிளப்பியது.

இதில் லட்சக்கணக்கானவர்கள் மறுமதிப்பீட்டிற்காக விண்ணப்பித்தனர். இருந்தும் விண்ணப்பித்த 3.29 கோடி பேரில் 2.9 கோடி பேரின் பெயர்கள் மட்டுமே வரைவு பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து கூடுதல் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. விடுபட்ட பலரும் தங்கள் பெயரை மீண்டும் சேர்க்ககோரி மறு விண்ணப்பங்கள் அளித்துள்ளனர். எனினும் சான்றுகள் உறுதிபடுத்தப்பட்டால் மட்டுமே பெயர்கள் சேர்க்கப்படும் என ஏற்கெனவே அசாம் அதிகாரிகள் தெளிவுபடுத்தி இருந்தனர். இறுதிபட்டியல் வெளியிடப்படும் முன்பாக சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பெயர்கள் சேர்க்கப்படுவது பற்றி எந்த தகவலும் தெரியாமல் இருப்பதால் அசாமி் ஒருவித பதற்றம் நிலவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x