Published : 28 Aug 2019 03:33 PM
Last Updated : 28 Aug 2019 03:33 PM
கொல்கத்தா
ஒரே தேர்தல், ஒரே தலைவர், ஒரே கட்சி, ஒரே எமர்ஜென்ஸி என மாறி வருவதாக மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அண்மை காலமாக மக்களவைத் தேர்தலுக்கு பிறகு தனது ஆவேச தாக்குதலை குறைத்துள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்திலும், ரிசர்வ் வங்கியின் உபரி நிதி மத்திய அரசு வாங்கி விவகாரத்திலும் கடுமையாக விமர்சிப்பதை மம்தா பானர்ஜி தவிர்த்து வந்தார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் மத்திய அரசு மீதும், பாஜக மீது கடும் தாக்குதலை தொடுத்தார்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மாணவர் அணியின் நிறுவன தினம் இன்று கொண்டாடப்பட்டது. கட்சித் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி இந்த விழாவில் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
‘‘நாடு மிகவும் மோசமான ஒரு நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நமது அரசியல் குடியரசு தலைவர் ஆட்சிமுறையாக மாறி வருகிறது. கல்வி பயன்று வரும் உங்களிடம் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே தலைவர், ஒரே கட்சி, ஒரே எமர்ஜென்ஸி’ என மாறிக் கொண்டு இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT