

இரா.வினோத்
பெங்களூரு
காபி டே நிறுவன உரிமையாள ரும், கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனுமான வி.ஜி. சித்தார்த்தா (60) கடந்த மாதம் 29-ம் தேதி மங்களூரு அருகேயுள்ள நேத்ரா வதி ஆற்றின் அருகே திடீரென மாயமானார். 36 மணி நேர தீவிர தேடலுக்கு பிறகு அவரது உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப் பட்டது. மங்களூரு மருத்துவமனை யில் பிரேத பரிசோதனை செய்யப் பட்ட பிறகு அவரது உடல் சிக்க மகளூருவில் உள்ள அவரது காபி எஸ்டேட்டில் தகனம் செய்யப்பட் டது.
இதுகுறித்து மங்களூரு மாநகர காவல் ஆணையர் ஹர்ஷா கூறும் போது, “பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி வி.ஜி.சித்தார்த்தா ஆற்றில் குதித்து தற் கொலை செய்துகொண்டிருப் பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சட்டப்பூர்வமாக வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டும் வரை, வழக்கில் விசா ரணை தொடரும்” என்றார்.
சித்தார்த்தாவின் தந்தை மரணம்
மைசூருவில் உள்ள மருத் துவமனையில் 6 மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்த சித்தார்த் தாவின் தந்தை கங்கய்யா ஹெக்டே (95) நேற்று முன்தினம் காலமானார். கடந்த 3 மாதங்களாக கோமா நிலையில் இருந்த இவர் தன் மகன் சித்தார்த்தா மரண செய்தியைக்கூட அறியாமல் இருந் தார். மகன் இறந்த ஒரு மாதத்துக் குள் தந்தையும் இறந்ததால் காபி டே ஊழியர்களும், உறவினர் களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.