Published : 26 Aug 2019 12:24 PM
Last Updated : 26 Aug 2019 12:24 PM

10 ஆண்டுகளுக்குப் பின்னர் அரசியலுக்குத் திரும்புகிறார் சஞ்சய் தத்

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் அரசியலுக்குத் திரும்புகிறார்.

கடந்த 2009-ம் ஆண்டு சன்ஞய் தத் சமாஜ்வாதி கட்சி சார்பில் லக்னோ தொகுதியிலிருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தார். ஆனால், ஆயுத தடுப்பு வழக்கில் நீதிமன்றம் அவர் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்ய மறுத்ததால் சஞ்சய் தத் மனுவை வாபஸ் பெற்றார். பின்னர் சமாஜ்வாதி கட்சியின் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். ஆனால், அப்பதவியை அவர் குறுகிய காலத்திலேயே ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் வரவிருக்கும் மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி பாஜகவின் தோழமை கட்சியான ராஷ்ட்ரீய சமாஜ் பக்‌ஷ் கட்சியில் வரும் செப்டம்பர் 25-ல் அவர் இணையவிருப்பதாக அக்கட்சியின் தலைவரும் மகாராஷ்டிரா அமைச்சருமனா மஹாதேவ் ஜன்கர் கூறியிருக்கிறார்.
ஞாயிரன்று நடந்த ஒரு நிகழ்வில் ஜன்கர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

அப்போது அவர், "சஞ்சய் தத் இன்று இந்தக் கூட்டத்துக்கு வருவதாக இருந்தது. ஆனால் அவர் துபாயில் படப்பிடிப்பில் இருப்பதால் அவரால் இன்று இங்கு வர இயலவில்லை. வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி சஞ்சய் தத் நமது கட்சிக்காக பிரச்சாரம் மேற்கொள்வார்" என்று கூறியதோடு சஞ்சய் தத் பேசி அனுப்பிய வீடியோவையும் வெளியிட்டார்.

அதில் சஞ்சய் தத் ஜான்கரை தனது சகோதரர், நண்பர் என்றெல்லாம் புகழ்ந்திருப்பதோடு வெளிநாடு சென்றுவிட்டதாலேயே வர இயலவில்லை என்பதையும் தெரிவித்திருந்தார்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x