Published : 25 Aug 2019 02:59 PM
Last Updated : 25 Aug 2019 02:59 PM

பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்க மக்கள் இயக்கம்: பிரதமர் மோடி மன் கி பாத் உரை

புதுடெல்லி
மஹாத்மா காந்தி பிறந்த நாளில் பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்க பெரிய மக்கள் இயக்கத்தை தொடங்குவோம் என மன் கி பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், இந்திய வானொலியில் “மனதின் குரல்” என்ற நிகழ்ச்சியைப் பிரதமர் மோடி தொடங்கி மக்களிடம் பேசினார். அப்பேதுமுதல் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அவர் பல்வேறு சமூக பிரச்சினைகளை, மக்கள் குறித்தும், சாதித்த இந்தியர்கள், குறித்தும் நாட்டில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள் குறித்தும் பேசி வருகிறார்.

இரண்டாவது முறையாக வெற்றி பெற்று பிரதமரான பிறகும் அவர் தொடர்ந்து மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். ஆகஸ்ட் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான

இன்று அவர் தனது மன் கீ பாத் நிகழ்ச்சியில் உரையாற்றியதாவது:
‘‘பகவான் கிருஷ்ணரின் வாழ்க்கையில் இருந்து நாம் ஒவ்வொருவரும் உந்து சக்தியை பெற முடியும். ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் அவர் தீர்வை தருகிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு அவதரித்த கிருஷ்ணர் இன்று நிலவும் பிரச்சினைக்கும் தீர்வாக நாம் காணலாம். கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் இந்த தருணத்தில் நாம் அவரிடம் இருந்து உத்வேகத்தை பெறுவோம்.

இந்தியா ஒரு பெரிய திருவிழாவிற்காக தயாராகிக் கொண்டிருக்கிறது. அக்டோபர் 2-ம் தேதி மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த தினத்தினை பற்றி உலகம் முழுவதும் பரவலாக மக்கள் பேசி வருகின்றனர்.

சேவை செய்யும் உணர்வு மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக இருந்துள்ளது. அவரது 150-வது ஆண்டு தின கொண்டாட்டத்தில், தூய்மையான இந்தியாவை அவருக்கு அர்ப்பணிப்பதுடன், பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்கும் பெரிய இயக்கத்தினை நாம் தொடங்க வேண்டும்.

இந்தியாவில் இருந்து பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்கும் வகையில் இந்த ஆண்டு காந்தி ஜெயந்தியை கொண்டாட வேண்டும் என அனைவரையும் நான் வேண்டுகிறேன்.பருவ நிலை மாற்றத்திற்கு எதிராகவும், இந்தியாவில் தூய்மையான சுற்றச்சூழலுக்காகவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை அறிந்து கொள்ள மக்கள் விரும்புகின்றனர் ஆக 29-ம் தேதி தேசிய விளையாட்டு தினத்தன்று, பிட் இந்தியா இயக்கத்தை நாம் தொடங்குவோம். அனைவரும் நல்ல உடல் தகுதியுடன் இருப்பதை பார்க்க விரும்புகிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x