Published : 18 Jul 2015 08:42 AM
Last Updated : 18 Jul 2015 08:42 AM
கடந்த 2013-ம் ஆண்டு கேரளாவை உலுக்கிய சோலார் பேனல் ஊழல் குறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையிலான குழு விசாரித்து வருகிறது.
இதில் பல்வேறு சாட்சிகளிடம் நடத்திய விசாரணை மற்றும் பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக் கள் உட்பட பல்வேறு அரசியல் வாதிகளுக்கு விசாரணைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
என்றாலும் முதல்வரும் மற்றவர்களும் விசாரணைக்குழு முன் ஆஜராக வேண்டிய கட்டாயமில்லை என்று கூறப் படுகிறது. இவர்கள் தங்கள் தரப்பு வாதங்கள் மற்றும் ஆதாரங்களை அளிக்க வாய்ப்பளிக்கும் வகை யில், விசாரணைக்குழு சட்டம் 8(பி)-ன் கீழ் இந்த நோட்டீஸ் அனுப் பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சோலார் பேனல் ஊழல் வழக்கில் சரிதா நாயர், பிஜு ராதா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக கைது செய்யப் பட்டனர்.
இதில் 9 மாத சிறை வாசத் துக்குப் பின் சரிதா ஜாமீன் பெற் றுள்ளார். பிஜு ராதாகிருஷ்ணன் சிறையில் உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT