Published : 24 Aug 2019 12:41 PM
Last Updated : 24 Aug 2019 12:41 PM

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்

பாஜக மூத்த தலைவரும், முன்னாள மத்திய அமைச்சருமான அருண் ஜேட்லி: கோப்புப்படம்


புதுடெல்லி,
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜேட்லி உடல்நலக் குறைவு காரணமாக, எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலமானார். அவருக்கு வயது 66.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜேட்லி உடல்நலக்குறைவால் கடந்த 9-ம் தேதி இரவு சுவாசக்கோளாறு உள்ளிட்ட பிரச்சினையால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதிலும் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் இல்லை. இதற்கிடையே திடீரென அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதையடுத்து, கடந்த செவ்வாய்கிழமை முதல் செயற்கை சுவாசம், எக்மோ கருவி ஆகியவற்றின் உதவியுடன் சிகிச்சையில் இருந்து வந்தார்.

அருண் ஜேட்லியின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாஜக மூத்ததலைவர் எல்.கே.அத்வானி, மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த நிர்வாகிகள் பலர் சென்று மருத்துவமனையில் விசாரித்தனர்.
. இருப்பினும் ஜேட்லியின் உடல்நிலையை, பல்வேறு பிரிவுகள் கொண்ட சிறப்பு மருத்துவர்கள் குழு கண்காணித்தனர்.

இந்நிலையில், ஜேட்லியின் உடல்நிலை நேற்று இரவிலிருந்து மிகவும் மோசமடைந்து வருவதாக எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் சற்று நேரத்துக்கு முன் காலமானதாக எய்ம்ஸ் மருத்துவனை அறிவித்தது
கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டபின் அருண்ஜேட்லி கட்சிப்பணிகள், அரசுநிர்வாகத்தில் சற்று ஒதுங்கியே இருந்தார்.

மக்களவைத் தேர்தலில் பாஜககூட்டணி வென்று 2-வது முறையாக ஆட்சி அமைத்தபின் அமைச்சரவையில் இடம் பெற விருப்பம் இல்லை என்று பிரதமர் மோடிக்கு ஜேட்லி தெரிவித்தார். அவரை சமாதானம் செய்ய பிரதமர் மோடி முயன்றபோது, தனது உடல்நிலையை காரணம்காட்டி விலகிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x