Published : 22 Aug 2019 04:23 PM
Last Updated : 22 Aug 2019 04:23 PM

ப.சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை: நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வாதம்

புதுடெல்லி
சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனவே அவரை காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ, அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரம் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் சிபிஐ சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜாரனார். அவர் தனது வாதத்தல் கூறுகையில் ‘‘அந்நியச் செலவாணி மோசடி வழக்கில் இது மிகவும் முக்கியது. முக்கிய ஆவணங்களை அவர் மறைத்து வைத்து இருக்கிறார்.


பேசாமல் இருப்பது அவருக்கு வழங்கப்பட்ட சுதந்திரமாக இருக்கலாம். ஆனால் வழக்கு விசாரணையின்போது அவ்வாறு இருக்க முடியாது. எனவே சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது’’ எனக் கூறினார்.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x