Published : 22 Aug 2019 11:01 AM
Last Updated : 22 Aug 2019 11:01 AM

அவசர வழக்காக விசாரிக்கப்படாதது ஏன்?- கபில் சிபல் ஆதங்கம்

புதுடெல்லி

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சார்பில் நேற்று முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது போது உச்ச நீதிமன்றம் விசாரிக்காதது கவலையளிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், சிதம்பரம் சார்பில் ஆஜரான வழக்கறிஞருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ, அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

இதையடுத்து, முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்தமனு நாளை விசாரணை செய்யப்படும் என உச்சநீதிமன்றம தெரிவித்தது. இதனிடையே சிதம்பரம் நேற்று இரவு டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.

அவர் இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிகிறது. இதுபற்றி சிதம்பரம் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘‘நீதித்துறையில் பணியாற்றும் என்னை போன்றவர்களுக்கு பெரிய கவலை ஏற்பட்டுள்ளது. இது சாதாரண மக்களின் கவலையும் இது தான்.

நீதிபதி வழக்கை விசாரித்து இருக்க வேண்டும் என்ற நாங்கள் விரும்பினோம். ஆனால் தான் அதனை தலைமை நீதிபதிக்கு அனுப்பி விட்டதாக கூறினார். ஒரு குடிமகனாக வழக்கு விசாரிக்கப்படக் கூடாதா’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x