Published : 19 Aug 2019 03:08 PM
Last Updated : 19 Aug 2019 03:08 PM
புதுடெல்லி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு நாட்டில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பில் புரட்சியைக் கொண்டுவருவதில் அவர் செய்த சாதனைகளை ராகுல் காந்தி இன்று நினைவுகூர்ந்தார்.
1944, ஆகஸ்ட் 20-ல் பிறந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த நாள் நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது தந்தையின் சாதனைகளை இன்று நினைவுகூர்ந்தார். அத்துடன் ராஜீவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்த வீடியோ பதிவு ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ட்விட்டரில் ராகுல் கூறியுள்ளதாவது:
எனது தந்தையின் 75-வது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக, காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் நினைவு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும். முன்னாள் பிரதமரின் பிறந்த நாள் ஆகஸ்ட் 20 அன்று வருகிறது.
"இந்த வாரம் முழுவதும், ஒவ்வொரு நாளும் அவரது 75-வது பிறந்த நாளை இந்தியா முழுவதும் அவரை நினைவுகூரும் நிகழ்வுகளுடன் கொண்டாடுவோம். அவரைக் கவுரவிப்பதற்காக, அவரது பல நம்பமுடியாத சாதனைகளில் ஒன்றை நான் கவனப்படுத்துகிறேன்.
வீடியோ பதிவு:
This week we will celebrate my father, Rajiv Gandhi Ji's 75th birth anniversary with memorial events across India.
To honour him, each day this week, I will draw attention to one of his many incredible achievements. Today, the Information Technology revolution. #RajivGandhi75 pic.twitter.com/qBjIfTVRkj— Rahul Gandhi (@RahulGandhi) August 19, 2019
இவ்வாறு ராகுல் காந்தி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதனுடன், ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் தகவல் தொழில்நுட்பம், கிராமங்களுக்கு தொலைத்தொடர்புகளை விரிவுபடுத்தியது, ரயில்வேயில் டிஜிட்டலில் முன்பதிவு, தொழில் மேம்பாடு போன்றவற்றை எடுத்துரைக்கும் 55 விநாடி வீடியோவையும் இணைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT