Published : 18 Aug 2019 04:37 PM
Last Updated : 18 Aug 2019 04:37 PM

உ.பி.யில் பத்திரிகையாளர், சகோதரர் சுட்டுக் கொலை: முதல்வர் ஆதித்யநாத் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

முன்னணி இந்திப் பத்திரிகை புகைப்பட நிருபர் மற்றும் அவரது சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கொலை செய்யப்பட்ட நிருபர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இது குறித்து போலீஸார் தரப்பு முதற்கட்ட விசாரணையில், நிருபர் ஆஷிஷ் ஜன்வானி இவரது சகோதரர் ஆகியோர் குப்பை கொட்டுவது தொடர்பாக அண்டை வீட்டார் சிலருடன் சண்டையிட்டுள்ளார். இது பிறகு வன்முறையாக மாற சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜன்வானி மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் மரணிக்க, சகோதரர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறும்போது, “உ.பி. மாநிலம் பாஜக ஆட்சியில் கொலைகார மாநிலமாக மாறிவருகிறது. கொலைகள் சர்வசாதாரணமாக நடந்து வருகின்றன” என்று அகிலேஷ் யாதவ் கூறியதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x