கிருஷ்ணா நதியில் வெள்ளப் பெருக்கு; 2 மாவட்டங்களில் 87 கிராமங்கள் பாதிப்பு

கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் உண்டவல்லி பகுதியில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வீட்டை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் உண்டவல்லி பகுதியில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வீட்டை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
Updated on
1 min read

என்.மகேஷ்குமார்

விஜயவாடா

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா நதி யில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குண்டூர், கிருஷ்ணா மாவட்டங் களில் 87 கிராமங்கள் பாதிக்கப் பட்டுள்ளன.

தென்மேற்கு பருவமழை தீவி ரம் அடைந்துள்ளதால், ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கிருஷ்ணா மற்றும் குண் டூர் மாவட்டங்களில் 87 கிராமங் களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில் 24 கிராமங்கள் வெள்ளத் தில் தத்தளிக்கின்றன. கிருஷ்ணா, குண்டூர் மாவட்டங்களில் 11 ஆயி ரத்துக்கும் மேற்பட்டோர் வெளி யேற்றப்பட்டு, 56 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பிரகாசம் அணையில் 7 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டதில் சுமார் 370 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மின்சாரம் துண்டிக் கப்பட்டுள்ளதால் ஏராளமான கிரா மங்கள் இருளில் மூழ்கியுள்ளன. சில இடங்களில் ஏரிகள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மின் சாரம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படைவசதிகள் இல்லாத தால் இயல்பு வாழ்க்கை முடங்கி யுள்ளது. மத்திய பேரிடர் மீட்புக் குழுவினர், மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in