Published : 17 Aug 2019 07:32 AM
Last Updated : 17 Aug 2019 07:32 AM
புதுடெல்லி
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட் டத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து நேற்று ஆலோசிக்கப்பட்டது. இது குறித்து ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் சயீது அக்பருதீன் கூறிய தாவது:
தீவிரவாதத்தால் காஷ்மீர் பாதிக்கப்பட்டிருக்கிறது. அவர்களி டம் இருந்து எங்கள் குடிமக்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவுடன் அமை திப் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ் தான் விரும்பினால், முதலாவதாக எல்லை தாண்டிய தீவிரவாதத்தை நிறுத்த வேண்டும்.
காஷ்மீருக்கான சிறப்பு அந் தஸ்தை நீக்கியது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இதில் யாரும் தலையிட முடியாது. இதன் மூலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதி மக்கள் சமூக, பொரு ளாதாரரீதியாக முன்னேறுவார் கள். காஷ்மீரில் அசாதாரண சூழ் நிலை நிலவுவதாக சிலர் சித்தரிக் கின்றனர். அங்கு முழு அமைதி நிலவுகிறது.
குறிப்பிட்ட ஒரு நாடு மட்டுமே ஜிகாத் என்ற பெயரில் காஷ்மீரில் வன்முறையை தூண்ட முயற்சிக் கிறது. அதனை முறியடிப்போம்.
இவ்வாறு சயீது அக்பருதீன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT