Published : 16 Aug 2019 07:46 PM
Last Updated : 16 Aug 2019 07:46 PM

காஷ்மீர் பத்திரிகையாளரைக் கைது செய்து பிணையில் விடுவித்த பாதுகாப்புப் படை

ஸ்ரீநகர், பிடிஐ

‘கிரேட்டர் காஷ்மீர்’ செய்தித்தாள் கரெஸ்பாண்டண்ட் இர்பான் மாலிக் என்பவர் ஆகஸ்ட் 14ம் தேதி இரவு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு பிறகு பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புல்வாமா மாவட்டம் த்ரால் பகுதியில் அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்ட இர்பான் மாலிக் விசாரிக்கப்பட்டு பிறகு பிணைப்பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு விடுதலை செய்யப்பட்டார் என்று அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்ற உடனடித் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

ஆனால் அதிகாரிகள் தெரிவிக்கும் போது சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோரிடமிருந்து இது போன்று பிணைப்பத்திரம் கையெழுத்திடப்பட்டு பெறப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x