Published : 19 Jul 2015 11:43 AM
Last Updated : 19 Jul 2015 11:43 AM

சர்வதேச செம்மர கடத்தல் வியாபாரிகள் 3 பேர் கைது: ஹரியாணா, டெல்லியில் சிக்கினர்

சர்வதேச செம்மரக் கடத்தல் வியா பாரிகள் 3 பேரை கடப்பா போலீ ஸார் ஹரியாணா மற்றும் டெல்லி யில் கைது செய்தனர்.

திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் இருந்து செம்மரங்கள் பல்வேறு வெளி மாநிலங்களுக் கும், வெளி நாடுகளுக்கும் கடத்தப் பட்டு வருகின்றன. இதைத் தடுக்க ஆந்திர போலீஸார் வனத்துறை யுடன் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வரு கின்றனர்.

சேஷாசலம் வனப்பகுதியில் ஆந்திர வனத்துறை அதிகாரிகள் இருவர் செம்மரக் கடத்தல்காரர் களால் கொடூரமாக கொல்லப்பட் டனர். இதைத் தொடர்ந்து ஆந்திர அரசு சிறப்பு அதிரடிப் படையை நியமித்தது. இவர்கள் செம்மரக் கடத்தலைத் தடுக்க 24 மணி நேரமும் சேஷாசலம் வனப்பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மே மாதம் 7-ம் தேதி செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த 20 பேரை அதிரடி போலீஸார் சுட்டுக் கொன்றனர்.

இதுகுறித்து ஆந்திர உயர் நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இதனிடையே ஆந்திர அரசால் அமைக்கப்பட்ட 8 பேர் கொண்ட விசாரணைக் குழு, பாதிக்கப் பட்டவர்களிடம் விசாரணை நடத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆந்திர போலீஸார் செம்மரக் கடத்தல்காரர்களைப் பிடிக்க தீவிரம் காட்டத் தொடங்கி உள்ளனர்.

சீனா, மலேசியா நாடு களைச் சேர்ந்த செம்மர வியாபாரி களையும், சென்னை, பெங்க ளூரு, மங்களூரு, கொல்கத்தா, ஹரியாணா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகளையும், உள்ளூர் கடத்தல்காரர்களையும் கைது செய்துள்ளனர். அவர் களிடம் இருந்து பல தகவல்களை சேகரித்ததோடு, பல கோடி மதிப்புள்ள செம்மரங்களையும் பறிமுதல் செய்தனர். இதில் நடிகர், நடிகைகள் சிலரும் சிக்கினர்.

இந்நிலையில் ரகசிய தகவலின்பேரில், கடப்பா மாவட்ட சிறப்பு அதிரடிப்படையினர்கடந்த 14-ம் தேதி ஹரியாணாவுக்கு சென்று அங்கு தலைமறைவாக இருந்த பிரபல செம்மர வியாபாரி ஜெய்பாலை கைது செய்தனர். இவர் டெல்லி மட்டுமல்லாது சீனா, மலேசியா ஆகிய வெளி நாடுகளுக்கும் செம்மரங்களைக் கடத்துவது விசாரணையில் தெரியவந்தது.

இவரை போலீஸார் நேற்று கடப்பா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது ஜெய்பாலை 14 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜெய்பால் கொடுத்த தகவலின் படி, நேபாளத்தைச் சேர்ந்த லட்சுமண் டாங், டெல்லியைச் சேர்ந்த டிங்கு ஷர்மா ஆகிய இரண்டு சர்வதேச செம்மரக் கடத்தல் வியாபாரிகளையும் கடப்பா போலீஸார் டெல்லியில் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x