Published : 14 Aug 2019 06:56 PM
Last Updated : 14 Aug 2019 06:56 PM

முன்கூட்டியே களைகட்டிய இந்திய சுதந்திர தினம்: பாகிஸ்தான் எல்லையில் இந்தியர்கள் உற்சாகம்; வீடியோ

புதுடெல்லி

பாகிஸ்தான் எல்லையான அட்டாரி - வாகா பகுதியில் இந்தியர்கள் ஒருநாள் முன்கூட்டியே சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்தியாவின் 73-வது ஆண்டு சுதந்திர தினம் நாளை ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் கொடியேற்றி, மறைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறார்கள். டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றப்படுகிறது. பாரம்பரிய நிகழ்ச்சிகளும், முப்படையினர் அணிவகுப்பும் நடைப்பெறுகிறது.

இந்தநிலையில் பாகிஸ்தான் எல்லையான பஞ்சாப் மாநிலம் அட்டாரி - வாகா பகுதியில் முன்கூட்டியே இன்று சுதந்திர தினம் களைகட்டியது. ஆகஸ்ட் 14-ம் தேதியான இன்று மாலை பாகிஸ்தான் சுதந்திர தின கொண்டாட்டங்கள் முடிந்து அந்நாட்டு தேசியக்கொடி இறக்கப்பட்ட பிறகு அங்கு கூடியிருந்த ஏராளமான இந்தியர்கள் இந்திய தேசியக்கொடியை ஏற்றி ஆடிபாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x