Published : 14 Aug 2019 06:56 PM
Last Updated : 14 Aug 2019 06:56 PM
புதுடெல்லி
பாகிஸ்தான் எல்லையான அட்டாரி - வாகா பகுதியில் இந்தியர்கள் ஒருநாள் முன்கூட்டியே சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்தியாவின் 73-வது ஆண்டு சுதந்திர தினம் நாளை ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் கொடியேற்றி, மறைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறார்கள். டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றப்படுகிறது. பாரம்பரிய நிகழ்ச்சிகளும், முப்படையினர் அணிவகுப்பும் நடைப்பெறுகிறது.
இந்தநிலையில் பாகிஸ்தான் எல்லையான பஞ்சாப் மாநிலம் அட்டாரி - வாகா பகுதியில் முன்கூட்டியே இன்று சுதந்திர தினம் களைகட்டியது. ஆகஸ்ட் 14-ம் தேதியான இன்று மாலை பாகிஸ்தான் சுதந்திர தின கொண்டாட்டங்கள் முடிந்து அந்நாட்டு தேசியக்கொடி இறக்கப்பட்ட பிறகு அங்கு கூடியிருந்த ஏராளமான இந்தியர்கள் இந்திய தேசியக்கொடியை ஏற்றி ஆடிபாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
#WATCH Punjab: People celebrate at Attari-Wagah border ahead of #IndiaIndependenceDay pic.twitter.com/BqYh6GKwfk
— ANI (@ANI) August 14, 2019
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT