Published : 11 Aug 2019 09:20 AM
Last Updated : 11 Aug 2019 09:20 AM
ஸ்ரீநகர்
ஜம்மு காஷ்மீரில் முழுமையாக அமைதி திரும்புகிறது, வீண் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில போலீஸார் எச்சரித்துள்ளனர்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து கடந்த 5-ம் தேதி அரசாணை வெளியிடப் பட்டது. காஷ்மீர், 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட் டுள்ளது. இதன்காரணமாக காஷ்மீரில் பதற்றம் நிலவுவதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஸ்ரீநகர், தெற்கு காஷ்மீரின் சில பகுதிகளில் 144 தடையுத்தரவு அமல் செய்யப்பட்டது.
இந்நிலையில் பக்ரீத் பண்டி கையை ஒட்டி காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. பல பகுதிகளில் 144 தடையுத்தரவு விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.
மளிகை, மருந்து, காய்கறி கடைகள் திறந்துள்ளன. ஜம்மு சந்தையில் மக்கள் பொருட்களை வாங்க இன்று பெருமளவு குவிந்தனர்.
இதேபோன்று ஸ்ரீநகரின் பல பகுதிகளிலும் கடைகள் திறக்கப்பட்டன.ஸ்ரீநகரில் பல இடங்களில் 144 தடை உத்தரவு விலகிக்கொள்ளப்பட்ட நிலையில் மக்கள் ஏடிஎம்களுக்கு சென்று பணம் எடுத்தனர். இதனால் எடிஎம் மையங்களில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.
ஸ்ரீநகர் உட்பட காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல இடங்களில் மக்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். பொருட்களை வாங்க கடைகளில் கூட்டம் காணப்படுகிறது. முக்கிய இடங்களில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே ஜம்மு காஷ்மீரில் முழுமையாக அமைதி திரும்புகிறது, வீண் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில போலீஸார் எச்சரித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT