Published : 10 Aug 2019 03:15 PM
Last Updated : 10 Aug 2019 03:15 PM
புதுடெல்லி
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட உள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் நீண்டகாலமாக மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்து வந்தார். தொடர்ந்து அசாம் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவரின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்தது.
அசாமில் தற்போது பாஜக ஆட்சி நடைபெறும் நிலையில் அங்கிருந்து மன்மோகன் சிங் மீண்டும் தேர்வு செய்ய போதிய எம்எல்ஏக்கள் பலம் இல்லை. இதையடுத்து வேறு மாநிலங்களில் இருந்து அவரை தேர்வு செய்ய ஆலோசிக்கப்பட்டது.
இந்தநிலையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. மதன்லால் அண்மையில் காலமானார். அங்கு தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவதால் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
இதையடுத்து மன்மோகன் சிங்கை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. மன்மோகன் சிங் ஆகஸ்ட் 13 -ம் தேதி மனு தாக்கல் செய்கிறார். 26- ம் தேதி தேர்தல் நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT