Published : 09 Aug 2019 07:45 PM
Last Updated : 09 Aug 2019 07:45 PM

ஜோத்பூர்-கராச்சி இடையேயான தார் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் ரத்து செய்யும் பாகிஸ்தான்

லாகூர்- டெல்லி சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயிலை பாகிஸ்தான் பகுதிக்குள் அனுமதிக்க மறுத்து நிறுத்திய பாகிஸ்தான் தற்போது ஜோத்பூர்-கராச்சி இடையேயான தார் எக்ஸ்பிரஸ் ரயிலையும் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியது.

“வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் தார் விரைவு ரயிலையும் அனுமதியோம். மிர்புகாஸில் இந்தியப் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான போதிய ஆதாரங்கள், வசதிகள் எங்களிடையே இல்லை.” என்று பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமெட் தெரிவித்தார்.

“ஆகவே அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க 200 பயணிகளை ஜீரோ லைனில் தடுத்து ஒரு பாட்டில் தண்ணீருடன் 11.55 மணிக்கு திருப்பி அனுப்பிவிடுவோம். இப்போதைக்கு இதுதான்” என்றார்.

வியாழனன்று தான் ரயில்வே அமைச்சராக இருக்கும் வரை சம்ஜவுதா ரயில் போக்குவரத்தை தொடங்க அனுமதிக்க மாட்டேன் என்றார்.

காஷ்மீர் 370ம் சட்டப்பிரிவை இந்தியா ரத்து செய்ததையடுத்து பாகிஸ்தான் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x