Published : 09 Aug 2019 03:54 PM
Last Updated : 09 Aug 2019 03:54 PM

‘‘தேசத்துக்கு ஆற்றிய சேவைக்கு மரியாதை’’ - பாரத ரத்னா விருது பெற்ற பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி

பாரத ரத்னா விருது பெற்ற முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தேசத்துக்கு ஆற்றிய சேவைக்காக வழங்கப்பட்ட மரியாதை என பிரதமர் மோடி புகழாரம் சூழட்டியுள்ளார்.

பாரத் ரத்னா விருது, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, மறைந்த சமூக சேவகர் நானாஜி தேஷ்முக், பூபேந்திர குமார் ஹாசாரிகா ஆகியோருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
வியாழனன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் பிரணாப் உள்ளிட்ட மூவருக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்கினார்.
இதில் மறைந்த சமூக சேவகர் நானாஜி தேஷ்முக்கின் சார்பாக நெருங்கிய உறவினர் விரேந்திரஜீத் சிங் மற்றும் மறைந்த பாடகர் பூபென் ஹசாரிகா சார்பாக அவரது மகன் தேஜ் ஆகியோரிடம் விருதை வழங்கினார் ராம்நாத் கோவிந்த்.
விழாவில் பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்தநிலையில் பாரத ரத்னா விருது பெற்ற பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில் ‘‘இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக தாங்கள் செய்யாத பணிகள் ஏதுமில்லை. இந்த அயராத பணிகளுக்காக நீங்கள் பாரத ரத்னா விருது பெற்றுள்ளீர்கள். நாட்டுக்கு நீங்கள் செய்த பணிகளுக்கு வழங்கப்பட்ட மரியாதை இது’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x