Published : 02 Aug 2019 08:27 AM
Last Updated : 02 Aug 2019 08:27 AM

ஐ.நா. ஆண்டு கூட்டத்தில் செப்.28-ம் தேதி பிரதமர் உரை

புதுடெல்லி

ஐ.நா. பொதுச் சபையின் 74-வது ஆண்டு பொதுக் கூட்டம் செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில் உலக நாடுகளின் தலை வர்கள் உரையாற்றும் தேதியை ஐ.நா. தற்காலிகமாக வெளியிட் டுள்ளது.

அதன்படி, ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்த விவாதம் செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30-ம் தேதி வரை நடை பெறுகிறது. செப்டம்பர் 24-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உரையாற்றுகிறார். ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பிரேசில் நாட்டின் தலைவருக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் 2-வதாக உரை யாற்றுவது மரபாகப் பின்பற்றப்படு கிறது. அதன்படி, செப்.24-ம் தேதி ட்ரம்ப் உரையாற்றுவார்.

பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் மாதம் 28-ம் தேதி ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றுகிறார். ஐ.நா. கூட்டத்தின் போது பல்வேறு நாட்டுத் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

முன்னதாக கடந்த 2014-ம் ஆண்டு முதல் முறையாக பிரதமர் பதவியேற்ற நரேந்திர மோடி, ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் உரை யாற்றினார். அதன்பிறகு தற்போது செப்டம்பர் 28-ம் தேதி உரையாற்ற உள்ளார். இரண்டாவது முறை பிரதமராக பதவியேற்ற பிறகு, ஐ.நா.வில் முதல் முறையாக மோடி உரையாற்றப் போகிறார்.

ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் வரும் பிரதமர் மோடி, ஹூஸ்டன் நகரில் செப்டம்பர் 22-ம் தேதி அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்களைச் சந்தித்து உரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x