Published : 01 Aug 2019 08:37 PM
Last Updated : 01 Aug 2019 08:37 PM

ராணுவ உடையில் எம்.எஸ்.தோனி பேட்டில் கையெழுத்திடும் புகைப்படம் வைரல்

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி காஷ்மீரில் ராணுவப் பணியில் ஈடுபட்டுள்ளார். கிரிக்கெட்டிலிருந்து இருமாத காலம் ஓய்வு பெற்ற அவர் ராணுவத்தில் பணியாற்ற அனுமதி பெற்று அதற்கான பயிற்சியையும் மேற்கொண்டு தற்போது ஸ்ரீநகரில் ராணுவப் பணியாற்றி வருகிறார். 

செவ்வாயன்று காஷ்மீரில் ராணுவப்படையில் அவர் சேர்ந்தார். இந்நிலையில் ராணுவ சீருடையில் அவர் கிரிக்கெட் பேட்டில் கையெழுத்திடும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

தெற்குக் காஷ்மீரில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ராணுவப் படையினருடன் தோனி தற்போது பணியாற்றி வருகிறார். இவர்களுடன் தோனி ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் வரை பணியாற்றுவார் என்று தெரிகிறது. 

இந்நிலையில் அதிகாரி ஒருவர் கூறும்போது, “லெப்டினண்ட் கலோனல் தோனி ராணுவப் படையில் இணைந்தார்” என்று தெரிவித்தார்.

முன்னதாக இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் குறிப்பிடுகையில், “நாட்டின் குடிமகன் ஒருவர் ராணுவ உடை அணிந்து சேவை செய்ய தயார் என்று கூறும்போது அவரைத் தயார் படுத்தி கடமையை நிறைவேற்ற வைக்க வேண்டும். தோனி அடிப்படை பயிற்சி மேற்கொண்டார். அவரால் பணியைத் திறம்படச் செய்ய முடியும் என்று எங்களுக்குத் தெரியும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x