Published : 01 Aug 2019 04:28 PM
Last Updated : 01 Aug 2019 04:28 PM
புதுடெல்லி
தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரையில் இரண்டாவது சீசன் காலமான ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் சராசரி அளவு பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரையில் ஜூன் மாதத்தில் குறைவாக பெய்தது. எனினும் ஜூலை மாதத்தில் சராசரியை விட கூடுதல் மழை பெய்துள்ளது. நாடுமுழுவதும் சராசரியாக 105 சதவீதம் தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது.
ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சராசரியை விடவும் கூடுதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த இரண்டு மாதங்களில் 94% - 106% என்ற அளவில் சராசரி மழையளவு இருக்கும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மும்பை, வதோதரா உள்ளிட்ட மேற்கு பகுதி நகரங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT