Published : 27 Jul 2019 07:06 AM
Last Updated : 27 Jul 2019 07:06 AM

சித்தராமையா சொன்னதால் ராஜினாமா- கர்நாடக காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ பேட்டியால் பரபரப்பு

இரா.வினோத்

பெங்களூரு

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்த ராமையாவின் வழிகாட்டுதலின் படியே ராஜினாமா செய்தோம் என காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ சிவ ராம் ஹெப்பார் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கடந்த ஒரு மாதத் தில் 12 காங்கிரஸ், 3 மஜத எம்எல் ஏக்கள் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். இதில் 5-க்கும் மேற்பட்டோர் முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் தீவிர விசுவாசிகள் என்பதால், குமாரசாமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க சித்தராமையா முயற்சிப்பதாக மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சந் தேகம் தெரிவித்தனர்.

குமாரசாமியின் ஆட்சி கவிழ்ந் துள்ள நிலையில் மும்பையில் தங்கியிருந்த அதிருப்தி எம்எல்ஏக் கள் பெங்களூரு திரும்பி வருகின் றனர். நேற்று முன் தினம் பெங்களூரு திரும்பிய அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களில் ஒருவரான சிவராம் ஹெப்பார், ‘‘நான் இப்போதும் காங்கிரஸில்தான் இருக்கிறேன். இப்போதும் சித்தராமையாதான் எனக்கு தலைவர். அவரது வழி காட்டுதலின்படியே எம்எல்ஏ பத வியை ராஜினாமா செய்தேன். ஆட்சி கவிழும் வரை சிறிது விலகி இருக்குமாறு அவர் கூறினார்.

என்னைப் போலவே பைரத்தி பசவராஜ், முனி ரத்னா, சோம சேகர் உள்ளிட்டோரும் ராஜினாமா செய்துள்ளனர். எங்களது ராஜி னாமாவுக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் கூடிப் பேசி, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிப்போம்''என்றார்.

ஏற்கெனவே முன்னாள் பிரதமர் தேவகவுடா, குமாரசாமி ஆட்சியை கவிழ்க்க சித்தராமையா முயல் வதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியிடம் புகார் அளித் திருந்தார். அவரைத் தொடர்ந்து சிவாஜிநகர் எம்எல்ஏ ரோஷன் பெய்க் இதே கருத்தை வழிமொழிந் தார். தற்போது அதிருப்தி எம்எல்ஏ சிவராம் ஹெப்பாரும் சித்தரா மையாவின் பெயரை குறிப்பிட்டுள் ளதால் காங்கிரஸாரும், மஜதவின ரும் கடும் கோபம் அடைந்துள்ளனர்.

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சித்த ராமையா நேற்று கூறும்போது, "அதிருப்தி காங்கிரஸ் எம்எல் ஏக்கள் ராஜினாமா செய்ததற் கும், ஆட்சி கவிழ்ந்ததற்கும் எனக் கும் எந்த தொடர்பும் இல்லை. தீய எண்ணத்தோடு இவ்வாறு பொய் யான குற்றச்சாட்டுக்களை கூறியுள் ளனர். அதிருப்தி எம்எல்ஏக்கள் என் முன்னால் வந்து இந்த குற்றச் சாட்டுகளைக் கூறினால், தகுந்த பதிலை அளிப்பேன். மக்களுக்கும், கட்சிக்கும் துரோகம் செய்துவிட்டு, இப்போது பழியை என் மீது போட முயற்சிக்கின்றனர்''என விளக்கம் அளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x